October 24, 2018
தண்டோரா குழு
தென் கொரியாவின் மிக உயரிய சியோல் அமைதி பரிசு Modinomics மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்ததால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படவுள்ளது.
சியோல் அமைதி விருது என்பது 1990ம் ஆண்டு தென்கொரியாவில் உள்ள சியோல் என்ற இடத்தில் அறிவிக்கப்பட்டது.உலக நாடுகள் மத்தியில் நட்புணர்வை வளர்க்க மற்றும் அமைதியை நிலைநாட்ட உதவிய நபர்களை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,2018ம் ஆண்டின் சியோல் அமைதி விருது இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.இந்த விருதை பெறும் 14வது நபர் மோடி.உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியாவை,பொருளாதார வளர்ச்சி மற்றும் மனிதவளத்தில் மேம்பாடு அடைய செய்ததற்காக மோடிக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த விருது மோடிக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.தனக்கு இந்த விருதை அறிவித்ததற்காக கொரிய குடியரசிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.