March 30, 2019 தண்டோரா குழு
தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் வரும் 2-ம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
17 வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில். கூடவே 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தலும் நடைபெறவுள்ளது. எனவே இதனை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள்
முழுவீச்சில் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தேர்தலில் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்கும்படியும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் செலவுகளை கண்காணிக்க அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதையடுத்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடந்து தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் வரும் 2-ம் தேதி சென்னை வர உள்ளனர். தேர்தல் தொடர்பாக 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.