• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க மாட்டோம் தமிழக அரசு உறுதி

May 11, 2017 தண்டோரா குழு

மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க மாட்டோம் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது.

தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து,தமிழகத்தின் அனைத்து நெடுஞ்சாலை பகுதிகளில் அமைந்திருந்த சுமார் 3000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இதனையடுத்து நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளை குடியிருப்பு பகுதிகளுக்குள் தமிழக அரசு திறக்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர்,

போக்குவரத்து உள்ளிட்ட எந்த ஒரு இடையூறும் இல்லாத இடங்களில் தான் டாஸ்மாக் மதுபானக் கடைகளை தமிழக அரசு திறக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலோ, அல்லது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களிலோ மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசின் சார்பாக உறுதி அளித்தார்.

மேலும் படிக்க