• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி-ஜே.இ.இ தேர்வில் முதலிடம் பெற்ற உதய்பூர் மாணவன்

May 4, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் ஐ.ஐ.டி-ஜே.இ.இ தேர்வில் இந்திய அளவில் முதல் இடம் பெற்று சரித்திரம் படைத்துள்ளார்.

2௦17ம் ஆண்டிற்கான ஐ.ஐ.டி-ஜே.இ.இ தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் நகரைச் சேர்ந்த எம்டிஎஸ் பள்ளி மாணவர் கல்பிட் வீர்வேல் என்பவர் 36௦/36௦ மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். பள்ளியிலும் பயிற்சி நிறுவனத்திலும் சிறந்து விளங்கியா இவர் ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவர் என்ற பெருமையும் பெற்றார்.

இதுக்குறித்து கல்பிட் வீர்வேல் கூறுகையில்,

திருத்தம், வேகம், துல்லியம் மற்றும் கவனம் செலுத்துதல் ஆகியவை தான் என்னுடைய இந்த மகத்துவமான வெற்றிக்கு காரணம். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜே.இ.இ தேர்வின் அடுத்த நிலை தேர்வில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறினார்.

கல்பிட் வீர்வேலின் தந்தை உதய்பூரிலுள்ள மஹாராணா பூபல் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வருகிறார். கல்பிட் வீர்வேலின் தாயார் அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். ஜோத்பூரிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இவருடைய மூத்த சகோதரர் படித்துக்கொண்டு வருகிறார்.

முன்பதாக நடந்த இந்திய ஜூனியர் சயின்ஸ் ஒலிம்பியாட் போட்டியிலும், தேசிய திறமை ஆய்வு தேர்விலும் முதல் இடத்தில் இவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க