• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை – டிடிவி தினகரன்

October 31, 2018 தண்டோரா குழு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்கிற முடிவில் மாற்றம் இல்லை என்று அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து அந்த 18 பேரிடமும்,டி.டி.வி. தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.அப்போது தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து அனைவரிடமும் தினகரன் கேட்டார்.இந்த ஆலோசனையின் முடிவில்,தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்,மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,

“18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.மேலும் காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தால் அமமுக வெற்றி பெறும்.அப்போது, டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை என்றும்,அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு‘மண் குதிரை யார் என்பதை,எங்கு தேர்தல் நடந்தாலும் மக்கள் நிரூபிப்பார்கள்’ என்றார்.

மேலும் படிக்க