• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

18 ஆண்டுகளுக்குப் பின் தாய்க்கழகம் திரும்பிய செந்தில் பாலாஜி!

December 14, 2018 தண்டோரா குழு

அதிமுக முன்னாள் அமைச்சரும், அமமுக நிர்வாகியுமான செந்தில் பாலாஜி இன்று மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். 2006 ஆம் ஆண்டு கரூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2011-16 வரை ஜெயலலிதா தலைமையிலான அரசில் 2011 முதல் 2015 வரை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டு அமைச்சர் பொறுப்பில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார்.

பின்னர் 2016 இல் அரவக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏ ஆனார்.ஜெயலலிதா மறைவிற்கு பின், எடப்பாடி அணியில் இருந்த செந்தில் பாலாஜி பின்னர் பிரிந்து தினகரன் அணியில் செயல்பட்டு வந்தார். இதனால் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், செந்தில் பாலாஜிக்கும் டிடிவி தினகரனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். . 18 ஆண்டுகளுக்கு பின் திமுகவில் இருந்து விலகி சென்ற செந்தில் பாலாஜி இன்று மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.

பின்னர், திமுகவில் இணைவதற்கான உறுப்பினர் பதிவேட்டில் செந்தில்பாலாஜி கையெழுத்திட்டார். கரூரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் இருந்தும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோரும் திமுகவில் இணைந்தனர்.

மேலும் படிக்க