• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

17 பேர் பலியானதற்கு காரணமான சுற்றுச்சுவர் அகற்றம்

December 5, 2019

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியானதற்கு காரணமான சுற்றுச்சுவர் வருவாய் துறையினரால் தற்பொழுது அகற்றப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து நான்கு வீடுகள் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்திற்கு காரணமாக கூறப்படும் சுற்றுச்சுவர் மீதமுள்ளசுமார் 700 அடி நீளமும் 20 அடி உயரமும் கொண்ட சுற்றுச்சுவர் இன்று வருவாய் துறையினர் இடிக்கப்பட்டது.

இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் உள்ள ஒரு தரப்பினர் முன்னறிவிப்பின்றி சுற்றுச் சுவரை இடிக்க கூடாது என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி வருவாய்த்துறையினர் காவல்துறையின் உதவியுடன் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க