• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

16 வயது சிறுமி கர்ப்பம்; லாரி டிரைவர் போக்சோவில் கைது

December 11, 2021 தண்டோரா குழு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 28). லாரி டிரைவர். இவருக்கும் கோவையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது. அந்த சிறுமி 8-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மகேந்திரன் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் காந்திபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து பரிசோதனைக்காக சிறுமி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளார்.
அப்போது 16 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தது தொடர்பாக டாக்டர்கள் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 16 வயது சிறுமியை திருமணம் செய்த மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் படிக்க