• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

152 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய அபூர்வ சந்திரகிரகணம் பார்த்து ரசித்த மக்கள்

February 1, 2018 தண்டோரா குழு

கோவை வஉசி மைதானத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக 152 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய அபூர்வ சந்திரகிரகணத்தை  டெலஸ்கோப் மூலம் மக்கள்அனைவரும் பார்த்து மகிழ்ந்தனர்.

நீல நிலா என்பது ஒரே மாதத்தில் இரண்டு முறை பவுர்ணமி வருவதாகும். கடந்த ஒன்றாம் தேதி பவுர்ணமி தோன்றிய நிலையில் ஜனவரி மாதத்தில் நேற்று(ஜன 31) மீண்டும் பவுர்ணமி வந்துள்ளது.இந்த நீல நிலாவை  நூற்றுக்கணக்கான மக்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த டெலஸ்கோப் மூலம் பார்த்து ரசித்தனர்.

முழு சந்திர கிரகணம் நேற்று(ஜன 31) மாலை 6.15 மணியளவில் தொடங்கி 8.20 வரை தெரிந்தது. நிலா பூமிக்கு அருகில் வருவதால் 14 சதவிகிதம் பெரிதாகவும், 30 சதவிகித கூடுதல் பிரகாசத்துடன் தெரிந்தது. இந்த அபூர்வ சந்திர கிரகணத்தன்று பவுர்ணமி நாட்களை விட  நிலவு 14 சதவீதம் பெரியதாக தோன்றும். அதேபோல் வழக்கத்தை விட 30 சதவீதம் பிரகாசமாகவும் நிலவு காட்சியளிக்கும்.
 

 

 

மேலும் படிக்க