• Download mobile app
12 Apr 2026, SundayEdition - 3714
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

15 போகோ ஹரம் தீவிரவாதிகள் பலி

January 9, 2017 தண்டோரா குழு

நைஜீரியா நாட்டின் யோபே மாநிலத்தின் ராணுவ முகாம் மீது போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாகுதலில் 5 நைஜீரிய ராணுவத்தினர் இறந்தனர். ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் 15 போகோ ஹரம் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

இது குறித்து அந்நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) கூறியதாவது:

போகோ ஹரம் தீவிரவாதிகள் இஸ்லாமிய சட்டதிட்டங்ககளுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை நைஜீரியா நாட்டின் யோபே மாநிலத்தின் புணி யாதி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 நைஜீரிய ராணுவத்தினர் மற்றும் 15 போகோ ஹரம் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

போர்னோ மாநிலத்தின் தலைநகர் மைடிகுரி உள்ளிட்ட பிற பகுதிகளில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஆனால், அப்பகுதியில் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க