• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

15 நாட்கள் பரோல் கோரி சசிகலா மனு தாக்கல்

October 3, 2017 தண்டோரா குழு

பரோலில் விடுவிக்க அனுமதி கேட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இதனால், சசிகலா பரோலில் வெளிவந்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள தனது கணவர் நடராஜனை சந்திப்பார் கூறப்பட்டது.

இதையடுத்து, சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளிடம் பரோல் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். பரோல் விண்ணப்பத்தில் கணவர் நடராஜனின் உடல்நலக்குறைவே காரணம் காட்டி 15 நாட்கள் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.இதனால் கணவரை பார்க்கச் செல்ல சசிகலாவுக்கு அனுமதி வழங்க கோரி அளிக்கப்பட்டுள்ள மனு மீது கர்நாடக சிறைத்துறை விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க