• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

140 லிருந்து 280 வரை எழுத்துக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் டுவிட்டர்

September 27, 2017

டுவிட்டரில் உறுப்பினர்கள் பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் சமூகவலைத்தளங்களில் ஒன்று டுவிட்டர். பல கோடி மக்கள் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர்.

இதையடுத்து டு்விட்டர் வலைதளத்தை மேம்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.அதன் படி பல புதிய திட்டத்திற்கான ஆய்வுகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில் தற்போதைய கருத்து பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை உறுப்பினர்கள் பலருக்கு அதிருப்தி அளித்துள்ளது தெரியவந்திருப்பதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதனால் நினைத்த கருத்துக்களை முழுமையாக பதிவிட முடியவில்லை என பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து ட்விட்டரில் பதிவிடும் கருத்துகளின் எழுத்துக்களின் எண்ணிக்கையை 280 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போது ட்விட்டரில் 140 எழுத்துக்களை மட்டுமே பதிவிட முடியும். டைப் செய்து செய்தி அனுப்பும் வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்,பயன்பாட்டாளர்களின் வசதிக்காக பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டை தளர்த்தி சோதனை அடிப்படையில் 280 எழுத்துக்கள் வரை பதிவிடும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஜப்பான், சீனா, கொரிய மொழி எழுத்து வடிவத்திற்கு பழைய வரம்பே நீடிக்கும் என கூறப்பட்டு்ளது. 140 எழுத்துக்களில் அதிகமாக கருத்தை பதிவு செய்யும் வகையில், அவற்றின் வடிவங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க