• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

3 தொகுதிக ளில் 139 பேர் வேட்பு மனு தாக்கல்

November 2, 2016 தண்டோரா குழு

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (நவம்பர் 2) நிறைவடைந்தது. 139 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 26-ந் தேதி தொடங்கியது.

இந்த 3 தொகுதிகளிலும் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. , தி.மு.க., பா.ஜ. க., பா.ம.க., தே.மு.தி.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 2 கடைசி நாளாகும். புதன்கிழமை மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்கள் வியாழக்கிழமை (நவம்பர் 3) பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை வாபஸ் வாங்க 5-ந் தேதி கடைசி நாளாகும். அப்போது, வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.

நவம்பர் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 22-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அன்று மதியம் முடிவுகள் வெளியாகும்.இதனிடையே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதிநாளான புதன்கிழமை 139 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மேலும் படிக்க