• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

11 ரூபாய் செலவில் நடைபெற்ற திருமணம்!

September 15, 2017 தண்டோரா குழு

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ஆணுக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் 11 ரூபாய் செலவில் திருமணம் நடைபெற்ற சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று பலர் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.
பல திருமணங்கள் கோடி கணக்கில் செலவழித்து, ஆடம்பரமாக நடைபெறுவதை கண்டிருப்போம். ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் வெறும் 11 ரூபாயில் நடந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரை சேர்ந்த நபிஜதா பரீஸ்டா என்னும் பெண் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சுற்றி பார்க்க வந்திருந்தார்.அப்போது அந்த மாநிலத்தின் நபா என்னும் நகரை சேர்ந்த ஜாஹித் அலி என்பவரை சந்தித்தார். அவரை பார்த்ததும் நபிஜதா தனது மனதை பறிகொடுத்தார். இருவரும் முதலில் நட்புடன் பழக ஆரம்பித்தனர். அவர்களுடைய நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

ஆனால் ஒரு இந்தியரை திருமணம் செய்துகொள்ள தனது பெற்றோர் சம்மதம் தெரிவிப்பார்களா? என்று நபிசாதா கலக்கமடைந்தார். உடனே, தன்னுடைய திருமண விருப்பம் குறித்து, அவருடைய பெற்றோருக்கு கடிதம் எழுதினார். அவர்களும் தங்கள் சம்மதத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்களுடைய திருமணம் செப்டம்பர் 9ம் தேதி பஞ்சாபில் நடைப்பெற்றது. அவர்களுடைய திருமணம் வெறும் 11 ரூபாய் செலவில் நல்ல முறையில் நடந்தது. அந்த 11 ரூபாயை அவர்கள் திருமணத்தை நடத்தி கொடுத்த மதகுருவுக்கும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க