• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

IFS நிதி நிறுவன ஆடிட்டர் வெண்ணிலா வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை

August 5, 2022 தண்டோரா குழு

கோவை சபரிபாளையம், உப்பிலிபாளையம் பகுதியில்ஐ எஃப் எஸ் நிதி நிறுவன ஆடிட்டர் வெண்ணிலா வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

வேலூர் தலைமை இடமாக கொண்ட ஐஎப்எஸ் என்ற சர்வதேச நிதி சேவை மையம் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் 8000 கொடுப்பதாக கூறி நூதன மோசடியில் ஐஎஃப்எஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது இதனை அடுத்து பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேலூர் சென்னை கோவை காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை சவுரிபாளையம் உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள ஐ எஃப் எஸ் நிதி நிறுவன ஆடிட்டர் வெண்ணிலா வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் வங்கி கணக்குகள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ள ஆவணம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க