• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு 645,000 டாலருக்கு ஏலம்

December 18, 2017 தண்டோரா குழு

பிரான்ஸ் நாட்டில் சுமார் 10000ம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, மம்மூத் யானையின் எலும்புக்கூடு சுமார் 645,000 டாலருக்கு ஏலம் போனது.

சுமார் 10,000ம் ஆண்டுகளுக்கு முன், தாவரங்களை உண்டு வாழ்ந்த மம்மூத் யானைகள் வட அமெரிக்கா மற்றும் சைபெரியா நாடுகளில் வாழ்ந்து வந்தன. ஆனால், காலநிலை மாற்றம் மற்றும் வேட்டைக்காரர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால், சுமார் 3,700 ஆண்டுளுக்கு முன் மம்மூத் யானைகளின் இனம் முற்றிலும் அழிந்துவிட்டது.

சுமார் 1௦ ஆண்டுகளுக்கு முன், வேடன் ஒருவர் வடமேற்கு சைபெரியா நாட்டில் மம்மூத் யானையின் எலும்புக்கூடை கண்டுபிடித்து, அதை தனது வீட்டில் வைத்திருந்தார். அவர் வைத்திருந்த அந்த எலும்புக்கூடு, தற்போது பிரான்ஸ் நாட்டின் அகுட்டேஸ் ஏல நிறுவனம் ஏலம் விட்டது.

அந்த எலும்புக்கூட்டை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியர் எட்டினே பின்ட்ச்செத்லேர், சுமார் 6,45,000 டாலருக்கு அதை வாங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் அடையாள சின்னமாக (‘லோகோ’) யானை ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க