• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் பட்டம் வென்ற போக்குவரத்து காவலர் !

September 19, 2018 தண்டோரா குழு

சென்னையை சேர்ந்த காவலர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் பட்டதை வென்றுள்ளார்.

சென்னை அடையாறில் போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றி வருபவர் புருஷோத்தமன். இவர் தன் 18 வயதிலிருந்தே விளையாட்டு உடற்பயற்சி என அனைத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த 2000 முதல் 2008ம் ஆண்டு வரை ஆண் அழகன் போட்டியில் கலந்து கொண்டு ஆணழகன் பட்டதை வென்றுள்ளார்.இதற்கிடையில், கடந்த 2008ம் ஆண்டு இவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், புருஷோத்தமனுக்கு எந்தவித கடுமையான உடற்பயற்சியும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், அவரது வெற்றி பெரும் தாகம் மட்டும் குறையவில்லை அதில் இருந்து மீண்டு வந்து உடற்பயற்சி மேற்கொண்டார்.இந்நிலையில், இன்று சென்னையில் மிஸ்டர் ஆணழகன் தமிழ்நாடு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட புருஷோத்தமன் 80 கிலோ பிரிவில் தங்க பதக்கம் வென்றார். மேலும்., அனைத்து எடை பிரிவிலும் சாம்பியன் பட்டதை வென்று மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் என்ற பட்டதை வென்றார்.

இது குறித்து புருஷோத்தமன் கூறுகையில்,

இந்த மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் என்னுடைய கனவு. தற்போது நான் மாநில அளவில் கலந்து பட்டம் வென்றுள்ளேன் அடுத்த கட்டமாக இந்திய மற்றும் ஆசிய அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும் என்பதே என் குறிக்கோள் எனக் கூறியுள்ளார்.

அவரது வெற்றியின் தாகமே இந்த ஆண்டுக்கான மிஸ்டர் தமிழ்நாடு பட்டதை வெல்ல காரணமாக உள்ளது. இதையடுத்து, பல்வேறு பதக்கங்களை வென்று தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ள புருஷோத்தமனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் படிக்க