• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹைதரபாத் “பப்” களுக்கு வருபவர்கள் ஆதார் அட்டை கட்டாயம்!

September 19, 2017 தண்டோரா குழு

ஹைதரபாத்தில் உள்ள “பப்” களுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் அட்டையை வைத்திருக்க வேண்டும் என, தெலுங்கானா மாநில மதுவிலக்கு மற்றும் கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பப் களுக்கு வருபவர்கள் தாங்கள், 21 வயதை கடந்தவர்கள் என்பதற்கான ஆதாரமாக ஆதார் அட்டையை காட்ட வேண்டும்.மேலும், “பப்”களுக்கு வருபவர்கள் குறித்த தகவல்களை தனியாக குறித்து வைக்க வேண்டும் என, உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

இதுகுறித்து, கலால் துறை கண்காணிப்பாளரும், சிறப்பு புலனாய்வு பிரிவின் தலைவருமான எஸ். சீனிவாஸ் ராவ் கூறியதாவது,

ஹைதராபாத் ‘பப்’களுக்கு லைசென்ஸ் வழங்கும் போதே இதுபோன்ற உத்தரவு இருந்த நிலையில், இந்த உத்தரவு தற்போது தான் அமல்படுத்தப்படுகிறது. என்று கூறினார்.

கடந்த ஜூலை மாதம், தெலுங்கு திரைப்பட பிரபலங்களிடம், போதை பொருள் விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க