• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹெலிகாப்டர் விபத்து குறித்து யூகங்களை தவிர்க்கவும் – விமானப்படை

December 10, 2021 தண்டோரா குழு

குன்னூரில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். விமானத்தில் இருந்த அவரது மனைவி உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். முப்படைகள் சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அதிகாரிகள் குன்னூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த முப்படை விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பான விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு உண்மைகள் விரைவில் வெளிவரும். அதுவரை உயிரிழந்த ராணுவ வீரர்களின் கண்ணியத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில், ஆதாரமற்ற யூகங்களை தவிர்க்கவும் என விமானப்படை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க