• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹீமோபிலியா உள்ளவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் – 100 பேர் பங்கேற்பு

July 23, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவமனையில் ஹீமோபிலியா சிறப்பு சிகிச்சை மையம் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ஹீமோபீலியா ரத்த குறைபாடு உள்ளவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு தடுப்பூசி மையம் நடைபெற்றது. இந்த முகாமை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் இதுகுறித்து கூறுகையில்,

கோவை மாவட்டத்தில் ஹீமோபிலியா என்ற ரத்த குறைபாட்டினால் 350 பேர் உள்ளனர். அதில் 250 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். இந்நிலையில் ஹீமோபீலியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் தடுப்பூசி செலுத்தும் போது ரத்த கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் அதனை தடுக்க அவர்களுக்கு பேக்டர் 8 அண்டு 9 என்ற மருந்து செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதன் பிறகு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் மூலம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு ரத்தக்கசிவு ஏற்படவில்லை. இன்று ஒரே நாளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் 50 நோயாளிகள் மற்றும் அவர்களை கவனிப்பவர்கள் 50 பேர்களுக்கும் என 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது, என்றார்.

மேலும் படிக்க