• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ள நிவாரண தொகையாக 36 மில்லியன் டாலர் வழங்கிய டெல் நிறுவனம்

September 2, 2017 தண்டோரா குழு

ஹார்வே புயலால் பாதிக்கப்பட்ட டெக்ஸ்சாஸ் மாகணத்திற்கு 36 மில்லியன் டாலர் நிவாரண தொகையை டெல் நிறுவனத்தின் தலைவர் வழங்கினார்.

அமெரிக்காவில் ஹார்வே புயல் டெக்ஸ்சாஸ் மாகணத்தை ஆகஸ்ட் 25ம் தேதி தாக்கியது. அங்கிருந்த ஹூஸ்டன் மற்றும் ஹௌச்டன் நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.இதுவரை 311,௦௦௦ பேர் ஹார்வே புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நிவாரண முகாம்களில் 32 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் டெல் நிறுவனத்தின் தலைவர் மைகேல் டெல் மற்றும் அவருடைய மனைவி சூசன் புயலின் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக 36 மில்லியன் டாலர் வழங்கியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே 17 மில்லியன் டாலர் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் 1 மில்லியன் டாலர் வழங்கினார். கூகுள் நிறுவனம் ஹார்வே புயல் நிவாரண பணிக்காக 1௦ லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கியுள்ளது. இதேபோல் பல நிறுவனங்களும் டெக்ஸாஸ் மாகாணத்திற்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

மேலும் படிக்க