• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்தை சரமாரியாக தாக்கிய பெண்கள்

December 13, 2017 தண்டோரா குழு

செங்கல்ப்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளியும் தாயை கொலை செய்தவருமான தஷ்வந்த் மும்பையில் தப்பி சென்று மீண்டும் பிடிபட்டார். இந்நிலையில், சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கொலையாளி தஷ்வந்தை போலீசார் செங்கப்பட்டு மகளிர் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வந்தனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் தஷ்வந்த் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் இருந்து தஷ்வந்தை மீட்ட போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் ஆதரவாக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் விலகினார்.

இதனால் தஷ்வந்திற்காக வாதாட வழக்கறிஞர்கள் உள்ளனரா என நீதிபதி கேட்டார். அப்போது தனது வழக்கில் தானே வாதாட இருப்பதாக தஷ்வந்த் பதிலளித்தார். எனினும் இலவச சட்ட உதவி மையத்தை அணுக தஷ்வந்துக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

தஷ்வந்த் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பில் தஷ்வந்த் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க