• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பில் 32வதுசாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

January 22, 2021 தண்டோரா குழு

கோயமுத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்விநிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை, கோயமுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்ஆகியவை இணைந்து நடத்தும்32 – வது சாலை பாதுகாப்பு மாதத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வானது இன்று கோவை மகளிர்பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலர் சி.வி.ராம்குமார், ராமகிருஷ்ணா கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி. எல். சிவக்குமார், மத்திய மண்டலப் போக்குவரத்து அலுவலர் ஜெ. கே. பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்நிகழ்வில் சாலை விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தியும், முறையாக விதிமுறைகளைக்கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்குச்சிறப்புப்பரிசு வழங்கியும், விபத்தில்லா கோவையை உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வுடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை செவிலியர்களும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் என்.எஸ்.எஸ். மாணவர்களும் கலந்துகொண்டனர். இவ்விழிப்புணர்வு நிகழ்வினை ராமகிருஷ்ணா கல்லூரியின் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர்களான பேரா. பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன் ஆகியோர் ஏற்பாடுசெய்திருந்தனர்.

மேலும் படிக்க