• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பில் 32வதுசாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

January 22, 2021 தண்டோரா குழு

கோயமுத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்விநிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை, கோயமுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்ஆகியவை இணைந்து நடத்தும்32 – வது சாலை பாதுகாப்பு மாதத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வானது இன்று கோவை மகளிர்பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலர் சி.வி.ராம்குமார், ராமகிருஷ்ணா கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி. எல். சிவக்குமார், மத்திய மண்டலப் போக்குவரத்து அலுவலர் ஜெ. கே. பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்நிகழ்வில் சாலை விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தியும், முறையாக விதிமுறைகளைக்கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்குச்சிறப்புப்பரிசு வழங்கியும், விபத்தில்லா கோவையை உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வுடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை செவிலியர்களும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் என்.எஸ்.எஸ். மாணவர்களும் கலந்துகொண்டனர். இவ்விழிப்புணர்வு நிகழ்வினை ராமகிருஷ்ணா கல்லூரியின் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர்களான பேரா. பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன் ஆகியோர் ஏற்பாடுசெய்திருந்தனர்.

மேலும் படிக்க