• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக இயற்கை பாதுகாப்பு தின

July 28, 2020 தண்டோரா குழு

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக “உலக இயற்கை பாதுகாப்பு தினம்”இக்கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

இத்தினத்தை முன்னிட்டு இயற்கையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் மூலிகைச் செடிகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் அவர்கள் மூலிகைச் செடிகளை நட்டார். நிலவேம்பு, நோனி, துளசி, கற்பூரவல்லி போன்ற பாரம்பரிய இயற்கைச் செடிகள் இதில் இடம்பெற்றிருந்தது. தற்காலத்தில் இயற்கையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்களான பேராசிரியர்கள் பிரகதீஸ்வரன், நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க