April 6, 2019 தண்டோரா குழு
கோவை அபிராமி மருத்துவமனையில் குடல் நோய் கண்டறியும் முகாம் வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது.
கோவை ஸ்ரீ அபிராமி மருத்துவமனை நடத்தும் மாபெரும் இலவச குடல் நோய் முகாம் வருகின்ற ஞாயிற்றுகிழமை(7.42019) அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் வயிறு கல்லீரல், கணையம், குடல் குறக்கம் கர்ப்பை மற்றும் புற்று நோய்க்கான மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது.
மேலும் முகாமின் சிறப்பம்சங்கள் ஆவண ரூபாய் 3 ஆயிரம் மதிப்புள்ள இரத்த பரிசோதனைகள், அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் எண்டோஸ்கோபி பரிசோதனை தேவைபடுவோருக்கு இலவசமாக எடுக்கப்படும் எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.