• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியா கொண்டு வரப்படுகிறது

February 27, 2018 தண்டோரா குழு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு துபாயிலிருந்து தனி விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுகிறது.

திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு குளியறையில்  இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததார்.அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அவரது உடல் இந்தியாவிற்கு எப்போது கொண்டுவரப்படும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில், நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக அரசு வழக்கறிஞர் சான்றிதழ் வழங்காததால், அவரது உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடலை பெற இந்திய தூதரக அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி உடலை ஒப்படைப்பதற்கான கடிதத்தை துபாய் போலீசார், அவரது உறவினர்கள் மற்றும் இந்தியதூதரக அதிகாரிகளிடம் வழங்கினர்

இதையடுத்து, நடிகை ஸ்ரீதேவி உடலை பதப்படுத்தும் பணி நிறைவடைந்து துபாய் விமான நிலையத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது.இதைதொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு துபாயிலிருந்து ஸ்ரீதேவி உடலுடன் தனி விமானம் புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு மும்பை கொண்டு வரப்படுகிறது.

 

மேலும் படிக்க