February 27, 2018
தண்டோரா குழு
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு துபாயிலிருந்து தனி விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுகிறது.
திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு குளியறையில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததார்.அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அவரது உடல் இந்தியாவிற்கு எப்போது கொண்டுவரப்படும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக அரசு வழக்கறிஞர் சான்றிதழ் வழங்காததால், அவரது உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடலை பெற இந்திய தூதரக அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி உடலை ஒப்படைப்பதற்கான கடிதத்தை துபாய் போலீசார், அவரது உறவினர்கள் மற்றும் இந்தியதூதரக அதிகாரிகளிடம் வழங்கினர்
இதையடுத்து, நடிகை ஸ்ரீதேவி உடலை பதப்படுத்தும் பணி நிறைவடைந்து துபாய் விமான நிலையத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது.இதைதொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு துபாயிலிருந்து ஸ்ரீதேவி உடலுடன் தனி விமானம் புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு மும்பை கொண்டு வரப்படுகிறது.