• Download mobile app
28 Jul 2025, MondayEdition - 3456
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பாக நடைபெற்ற வீடு மற்றும் கார்களுக்கான சிறப்பு கடன் மேளா

December 3, 2022 தண்டோரா குழு

கோவையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பாக நடைபெற்ற வீடு மற்றும் கார்களுக்கான சிறப்பு கடன் மேளாவில் பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,சிறு குறுந்தொழில் முனைவோர், என பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஜி.பி.கிராண்ட் கேலக்சி அரங்கில் எஸ்.பி.ஐ. வங்கியின் கோவை வடக்கு மண்டலம் சார்பாக வீடு மற்றும் கார் லோன்களுக்கான சிறப்பு முகாம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.. முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் ஸ்டேட் வங்கி மண்டல பொது மேலாளர் திலீப் சிங் யாதவ் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பு முகாம் மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்தார்.இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தினர், வாகனங்கள் தொடர்பான டீலர் நிறுவனம் என பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும் இந்த கடன் முகாமில், கல்விக்கடன் சிறுகுறி மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அரசு திட்டம் சார்ந்த கடன் வழங்குவதற்கான தனித்தனி ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த லோன் நாளாவில் குறைந்த வட்டி வீதம் கடன் டாக்குமெண்டேஷன் இலவசம் பரிசீலனை கட்டணம் தள்ளுபடி பெற வங்கிகள் மற்றும் விதிமுறைகள் வாங்கிய கடன் மீது கூடுதல் கடன் போன்ற சிறப்பு சலுகைகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்க உள்ளதாக வங்கியின் மண்டல பொது மேலாளர் தெரிவித்தார்.

ஒரு நாள் நடைபெற்ற இந்த சிறப்பு கடன் மேளாவில்,பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,சிறு குறுந்தொழில் முனைவோர், மாணவர்கள் என பலர். கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும் படிக்க