• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

December 8, 2018 தண்டோரா குழு

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை பி.கே.புதூர் பகுதியில் 2.95 கோடி மதிப்பில் குனியமுத்தூர் இடையர்பாளையம் முதல் கோவைப்புதூர் வரையிலான நான்கு வழித்தடத்தை, பல்வழித்தடமாக மேம்படுத்துவதற்கான பூமிபூஜையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவையில் பல்வேறு சாலை விரிவாக்கத்தினால் விபத்துகள் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. தமிழகத்தில் எந்த தொகுதியிலும் இல்லாத வகையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சாலை, பால வேலைகள் நடந்து வருகிறது. இத்தொகுதியில் இரண்டு நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இத்தொகுதியில் கட்சி, சாதி வேறுபாடு இன்றி சகோதத்துவத்துடன் பழகி வருகிறேன் என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி,

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது. அந்த ஆலையை திறக்க முயற்சி என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. சமூக வலைதளங்களில் சாதி ரீதியிலான கருத்துகள் பரப்படுவது குறித்த கேள்விக்கு, இது ஆரேக்கியமாக இருக்காது எனவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் தமிழகத்தை பொறுத்தவரை எந்த வித சாதிய வேறுபாடு இன்றி இருந்து வருகிறோம் என்றும் கூறினார்.

மேலும் படிக்க