• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 47 வது நாளாக தொடரும் போராட்டம்

March 30, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 47 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் செயல்பட்டு தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட்டில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையால் அப்பகுதி குழந்தைகள் மற்றும் மக்கள் சுவாசக்கோளாறு, ரத்தசோகை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,குடிநீரும் முற்றிலும் மாசடைந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதையடுத்து,மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த ஆலையை மூடக்கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

47 வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில், கிராமத்தின் நடுவே மொத்தமாக சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு ஆலையை மூடக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்கள் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க