• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஷு வைக்கும் பெட்டியில் மூவர்ணக் கொடி

May 31, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய மூவர்ணக் கொடி அச்சிடப்பட்டிருந்த ஷு பெட்டியை வைத்திருந்த கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் சிட்டி மால் உள்ளது. அந்த மாலுக்கு கிரந்தி திவாரி என்ற காங்கிரஸ் பிரமுகர் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த ஷுகடை ஒன்றில், ஷுவை வைத்து பேக் செய்யப்படும் பெட்டியில் இந்திய மூவண்ண கொடி அச்சிடபட்டிருப்பதை கவனித்துள்ளார்.

இது குறித்து, காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளார். தகவலை பெற்ற அவர்கள், உடனே அங்கு சென்று மூவண்ணக் கொடி அச்சிடப்பட்ட ஷு பெட்டிகளை பறிமுதல் செய்தனர். 1971ம் ஆண்டு, தேசிய மூவண்ணக் கொடி அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து கோட்டா காவல்துறை அதிகாரி கூறுகையில்,

“அந்த கடையின் உரிமையாளர் மகேஷ் என்பவர் புதுதில்லியிலிருந்து ஷுக்களை வாங்கியுள்ளார். இந்த ஷுக்கள் அனைத்தும் சீனாவிலிருந்து தயாரிக்கப்பட்டது என்று கூறினார்.ஷு வைக்கும் பெட்டியில் மூவர்ண கொடி தொடர்பான வடிவமைப்பு இருப்பதை தான் அறியவில்லை எனவும் இந்த பெட்டிகள் 10 நாட்களுக்கு முன்னர்தான் தனது கடைக்கு வந்ததாகவும் காலணி கடை உரிமையாளர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க