February 8, 2018
தண்டோரா குழு
கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் பற்றி கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என சடகோப ராமானுஜ ஜீயர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆண்டாள் கோவிலுக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
மேலும், வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என ஜீயர் அறிவித்துள்ளார்.