• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வைப்புத்தொகையை பெற்றுக் கொள்ள வேட்பாளர்கள், விண்ணபிக்க வேண்டுகோள்

August 24, 2017 தண்டோரா குழு

உள்ளாட்சி தேர்தலில் 2016-ல் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தவர்கள் செலுத்திய வைப்புத்தொகையை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்குமாறு, கோவை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் 2016-ல் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயட்சை வேட்பாளர்கள், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தார்கள். இதற்காக அவர்களிடம் வைப்புத் தொகை வாங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இதனிடையே வேட்பாளர்கள் செலுத்திய வைப்புத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் செலுத்திய வைப்புத் தொகையை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்குமாறு கோவை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க