• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைப்புத்தொகையை பெற்றுக் கொள்ள வேட்பாளர்கள், விண்ணபிக்க வேண்டுகோள்

August 24, 2017 தண்டோரா குழு

உள்ளாட்சி தேர்தலில் 2016-ல் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தவர்கள் செலுத்திய வைப்புத்தொகையை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்குமாறு, கோவை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் 2016-ல் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயட்சை வேட்பாளர்கள், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தார்கள். இதற்காக அவர்களிடம் வைப்புத் தொகை வாங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இதனிடையே வேட்பாளர்கள் செலுத்திய வைப்புத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் செலுத்திய வைப்புத் தொகையை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்குமாறு கோவை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க