• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்

September 27, 2021 தண்டோரா குழு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவையில் பல்வேறு பகுதிகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் திமுக, இடதுசாரி ஆகிய கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க