• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலைக்கு ஆள் இல்லை – நூற்பாலை உரிமையாளர்கள் வேதனை

May 30, 2020 தண்டோரா குழு

கொரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும்,வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால் வேலைக்கு ஆள் இல்லாமல் சிரமப்படுவதாக நூற்பாலை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டதால்,தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்ப்பட்டுள்ளது. இதனிடையே கோவையில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.இதனால் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இருந்தும் தொழிலாளர்கள் இல்லாமல் தொழிற்சாலை உரிமையாளர்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக வடமாநில தொழிலாளர்களை மட்டுமே நம்பி கம்பனிகளை இயக்கி வந்தவர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் நூற்பாலையில் சுமார் 15 வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கொரோனா ஊரடங்கால் இரண்டு மாதங்களாக மூடப்பட்ட நூற்பாலை திறக்கப்பட்டு தொழிலாளர்கள் இல்லாததால் உள்ளூர் பெண்களை வைத்து தொழிற்சாலையை இயக்கி வருவதாக நூற்பாலை உரிமையாளர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.மேலும் வருவாய் இல்லாததால் பெண் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வழியில்லாமல்,எங்களது கோரிக்கையை ஏற்பட்டு பணி செய்து வருகின்றனர்.வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் சரக்குகளை ஏற்றி அனுப்புவது,லோடுகள் இறக்குதில் கடுமையான சிக்கல் நிலவி வருவதாக தெரிவித்தார்.

மேலும் உள்ளூர் பெண் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். வேலைக்கு ஆட்கள் இன்றியும்,வேலை செய்யும் பெண்களுக்கு ஊதியம் கொடுக்க வழியின்றியும் மிகவும் சிரமப்படுவதாக நூற்பாலை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க