• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநர் ராஜினாமா

August 1, 2017 தண்டோரா குழு

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் அந்தோனி ஸ்காராமுக் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாததால், தகவல் தொடர்பாளராக இருந்த மைக் டுபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, அந்தோணி ஸ்காராமுக்(53) அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தொடர்பாளராக பதவி ஏற்றார்.

அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் அந்தோணி ஸ்காராமூக்சை தகவல் தொடர்பாளராக நியமித்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளராக இருந்த ரேயன்ஸ் ப்ரீபஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவியை ஜான் எப். கெல்லி இன்று (ஆகஸ்ட் 1) ஏற்றுக்கொண்டார்.

அமெரிக்க வெள்ளை மாளிகை தலைமை பணியாளராக பதவியேற்ற ஜான் எப். கெல்லி தனக்கு இந்த பதவியை வழங்கியதற்காக குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்பிற்க்கு நன்றி தெரிவித்தார்.

தன்னுடைய பணிகளை குறித்த அனைத்து தகவல்களையும் அமெரிக்க குடியரசு தலைவரிடம் தான் கூறுவேன். தலைமை பணியாளரிடம் கூற முடியாது என்று அந்தோணி தற்பெருமையாக கூறியதன் விளைவு தான், அவரை பணியிலிருந்து விலக்க காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக தகவல் தொடர்பாளர் அந்தோணி தனது சக ஊழியர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பேசியாதாலும், வெள்ளை மாளிகையில் பணிபுரிவோர் குடியரசுத் தலைவர் டிரம்ப் குறித்த தகவல்களை ரகசியமாக வெளியிட்டால், பணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அதிரடியாக பேசியது தெரிய வந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க