February 13, 2021 தண்டோரா குழு
கோவை வெள்ளியங்கிரி 5வது மலைத்தொடரில் மிகவும் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தகவலின் அடிப்படையில், நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில், சடலத்தின் அருகே இருந்த அடையாள அட்டையில் சேலம் மாவட்ட ஓமலூரை சேர்ந்த தமிழரசன் என்பது இருந்ததால், சேலத்தில் விசாரித்ததில் காணாமல் போன புகாரில் வழக்கு உள்ளதால் உயிரிழந்தவர் தமிழரசன் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.
சடலத்தின் அருகே விஷ பாட்டில் இருந்ததால், தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகமடைந்துள்ளனர்.
நாளை பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. உயிரிழந்தவர் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.ஆலந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.