• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

January 30, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூரில் ரூ.168.4 கோடி மதிப்பீட்டில், 61.62 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூரில் புதிய ஒருங்கினைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுவரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் வெள்ளலூர் உரக்கிடங்கில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே பேருந்துநிலைய பணிகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலைய கட்டுமான பணிகளின் பல்வேறு நிலைகளை குறித்தும், கழிப்பிடம், குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய கட்டுமானப் பணிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் இப்பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வெள்ளலூர் உரக்கிடங்கில் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தையும், காய்கறிக்கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் ஆகிய மையங்களையும் பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின்போது மாநகரப் பொறியாளர் லட்சுமணன், உதவிப் பொறியாளர் ரவிக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க