July 14, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் தூய்மைப் பணிகள், வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை சுண்டக்காமுத்தூர் ரோடு சேத்துமாவாய்க்கால் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிட்டு மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். அதே போல் பாலாஜி நகர் பகுதியில் 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து ஆத்துப்பாலம் மின்மயானத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார். பின்னர் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் உக்கடம் பெரியகுளத்தில் பேஸ்-1 பகுதியில் 3.85 கி.மீட்டர் தூரத்திற்கு குளக்கரையினை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.அப்போது இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது தெற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன், செயற்பொறியாளர் (ஸ்மார்ட் சிட்டி) சரவணக்குமார், செயற்பொறியாளர் (தெற்கு) சுந்தரர்ராஜ் உதவி பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.