• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெளிநாடு வாழ் தமிழர்கள் நாடு திரும்ப சிறப்பு இணையதளத்தை தொடங்கியது தமிழக அரசு!

April 30, 2020 தண்டோரா குழு

கொரோனா பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்கள், தாயகம் திரும்ப விரும்பினால்,அதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் பொது ஊரடங்கை அமல்படுத்தியிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர்.அவர்களை தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்துள்ளது.அந்த வகையில், தமிழகம் திரும்ப விரும்புவோர், nonresidenttamil.org என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தமிழகம் திரும்பு விரும்புவோரின் விவரங்களை அறியவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யவும்,அவர்கள் தாயகம் திரும்பியதும் தனிமைப்படுத்தி வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யவும் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களின் எண்ணிக்கையை அறியவும் இந்த இணையதளம் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க