• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெலிங்டனில் இருந்து 13 ஆம்புலன்ஸில் 13 பேரில் உடல்கள் சூலூர் விமான படை தளத்திற்கு கிளம்பியது !

December 9, 2021 தண்டோரா குழு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை சுமந்து 13 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சூலூர் விமானப்படைத் தளம் நோக்கி புறப்பட்டது.

கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு ஹெலிகாப்டரில் நேற்று சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பிபின் ராவத் உட்பட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அஞ்சலிக்காக வெலிங்டன் ராணுவ தளத்தில் வைக்கப்பட்டது. அங்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திர ராஜன் மற்றும் கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார், விமானப்படை தளபதி வி.ஆர்.செளத்ரி, ராணுவ தளபதி நரவானே ஆகிய முப்படை தளபதிகள் இறுதி மரியாதை செலுத்தினர்.

இதனைதொடர்ந்து,வெலிங்டனில் இருந்து 13 ஆம்புலன்ஸில் 13 பேரில் உடல்கள் சாலை மார்க்கமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இன்று மாலை 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்படவுள்ளன.

மேலும் படிக்க