• Download mobile app
17 Jan 2026, SaturdayEdition - 3629
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெப்பநிலை அதிகரித்து காணப்படும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

April 18, 2017 தண்டோரா குழு

வறண்ட காற்று காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது, அடுத்த 24 மணி நேரத்திற்கு இதே நிலை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்

“ மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் தான் அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

வடதமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் 5 முதல் 6 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இதே நிலை நீடிக்கும். வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.” என்றார் அவர்.

மேலும் படிக்க