• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வீட்டு வாடகை கேட்டு சென்ற வயதான தம்பதியினருக்கு அரிவாளை காட்டி மிரட்டல்

June 4, 2020 தண்டோரா குழு

கோவையில் வீட்டு வாடகை கேட்டு சென்ற வயதான தம்பதி யினரை அரிவாளை காட்டி
மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி கல்கி வீதியை சேர்ந்தவர் மரிய பிரகாசம்.இவரது இல்லத்தில் ஜெயா என்பவர் கடந்த ஜனவரி மாதம் வாடகைக்கு குடியேறியுள்ளார். ஜெயா தனது மகள் மற்றும் தாயாருடன் குடியேறிய நிலையில் வீடு வசதியாக இல்லை என கூறி சில தினங்களில் வீட்டை காலி செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்

வாடகைக்கு வந்தபோது 20,000 ரூபாய் முன்பணமாகவும் வாடகை 5500 ரூபாய் எனவும் பேசப்பட்டது. ஆனால் ஜெயா பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து இருந்த நிலையில் மீதி தொகையை கொடுக்க முடியாது எனவும் இரண்டு மாதங்களில் வீட்டை காலி செய்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில்,கொரோனா பரவல் காரணமாக அடுத்து வேறு வீடு செல்ல முடியாத நிலையில் வாடகை கொடுக்காமல் ஜெயா மற்றும் அவரது குடும்பத்தினர் இதே வீட்டில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டு வாடகை கேட்டு சென்ற 85 வயதான தம்பதியினரை அரிவாளை காட்டி ஜெயாவும் அவரது குடும்பத்தினரும் மிரட்டி உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

மேலும் படிக்க