• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீட்டு வாடகை கேட்டு சென்ற வயதான தம்பதியினருக்கு அரிவாளை காட்டி மிரட்டல்

June 4, 2020 தண்டோரா குழு

கோவையில் வீட்டு வாடகை கேட்டு சென்ற வயதான தம்பதி யினரை அரிவாளை காட்டி
மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி கல்கி வீதியை சேர்ந்தவர் மரிய பிரகாசம்.இவரது இல்லத்தில் ஜெயா என்பவர் கடந்த ஜனவரி மாதம் வாடகைக்கு குடியேறியுள்ளார். ஜெயா தனது மகள் மற்றும் தாயாருடன் குடியேறிய நிலையில் வீடு வசதியாக இல்லை என கூறி சில தினங்களில் வீட்டை காலி செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்

வாடகைக்கு வந்தபோது 20,000 ரூபாய் முன்பணமாகவும் வாடகை 5500 ரூபாய் எனவும் பேசப்பட்டது. ஆனால் ஜெயா பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து இருந்த நிலையில் மீதி தொகையை கொடுக்க முடியாது எனவும் இரண்டு மாதங்களில் வீட்டை காலி செய்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில்,கொரோனா பரவல் காரணமாக அடுத்து வேறு வீடு செல்ல முடியாத நிலையில் வாடகை கொடுக்காமல் ஜெயா மற்றும் அவரது குடும்பத்தினர் இதே வீட்டில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டு வாடகை கேட்டு சென்ற 85 வயதான தம்பதியினரை அரிவாளை காட்டி ஜெயாவும் அவரது குடும்பத்தினரும் மிரட்டி உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

மேலும் படிக்க