November 11, 2021
தண்டோரா குழு
கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் அருகே உள்ள தட்டாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (65). இவரது கணவர் ஆண்டு இறந்து விட்டார், பொன்னம்மாளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும், திருமணம் முடிந்து விட்டது. மூத்த மகள் சுமதி, அவிநாசி அருகேயுள்ள தெக்கலூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பொன்னம்மாள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு சுமதியின் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி சென்று விட்டார், நேற்று இரவு 7 மணி அளவில் பொன்னம்மாள் தட்டாம்புதூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 6.5 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. அதை யாரோ மர்மஆசாமி திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பொன்னம்மாள் அளித்த புகாரின்பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.