• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீடு வீடாக ஆக்சிஜன் அளவை கண்டறியும் பணி – மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

May 30, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் பொதுமக்களின் ஆக்சிஜன் அளவை கண்டறியும் பணியில் 2 ஆயிரத்து 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கோவை மாவட்டத்தில் தற்போது 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்குணமடைந்து உள்ளனர்.

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை செய்வதுடன், பொதுமக்களின் ஆக்சிஜன் அளவை கண்டறியும் பணியில் 2 ஆயிரத்து 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில் ஒரு நபர் குறைந்தது 50 வீடுகளில் சோதனை மேற்கொள்வார்.சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதன்முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் தினமும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் படி 94 வது மற்றும் 100 வார்டு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் படிக்க