• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஸ்வரூபம் எடுத்த ஜெகன் மோகன் ரெட்டி – வரும் 30ம் தேதி ஆந்திர முதல்வராகிறார் !

May 23, 2019 தண்டோரா குழு

ஆந்திர முதல்வராக வரும் 30ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டமாக நடந்தது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. நாடு முழுவதும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது.

இதில், 141 தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் 149 இடங்களில் முன்னிலையில் உள்ளார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான தெலுங்குதேசத்திற்கு ஏற்பட்ட இந்த பின்னடவை அடுத்து முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு இன்றே ராஜினாமா செய்கிறார்.இதையடுத்து, வரும் 30ம் தேதி ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க