June 24, 2019 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ஒன்று அளித்தனர்.அதில் ஆனைமலை வட்டம் ஓடையகுளம் பகுதியில் விவசாய பாசனதிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் கோவை மாவட்ட தலைவர் பட்டீஸ்வரன்,
ஓடையகுளம் பகுதியில் 1000 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் இங்கு தென்னை,வாழை, கரும்பு என விவசாயிகள் பயிரிட்டு வருவதாக தெரிவித்தார். வழக்கமாக விவசாயதிற்கு மே 15 முதல் ஏப்ரல் 15 வரை பதினோரு மாதங்களுக்கு ஒரு போக விவசாயம் செய்ய ஒரு டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும். வருடதிற்கு இரண்டு போக விவசாயம் செய்து வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களாக தண்ணீர் திறக்கபடவில்லை என்றார்.
மேலும், தண்ணீர் திறக்காத காரணத்தால் ஒரு போக விவசாயம் செய்யவில்லை.ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை நம்பி கூலி வேலை செய்யும் பத்தாயிரம் பேர் பாதிக்கபட்டு உள்ளதாகவும் கூறினார்.இதனால் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் விவசாய பாசனதிற்கு தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.