• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் மகிழ்ச்சியடைய விரிவாக்கச் செயல்பாடுகள் தேவை – ககன்தீப்சிங்பேடி

August 18, 2017 தண்டோரா குழு

விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் விரிவாக்கச் செயல்பாடுகள் தேவை என்று வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங்பேடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 83-வது அறிவியல் உழைப்பாளர்கள் மாநாடு பல்கலைகழக பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக அரங்கில் இன்று நடைப்பெற்றது.

இதில் கலந்துக் கொண்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு. ராமசாமி பேசுகையில்

விவசாயிகள் முன்னேற்றத்தில் வேளாண் விஞ்ஞானிகளும் விரிவாக்கத்துறை அலுவலர்களும் இணைந்து செயலாற்றுவது முக்கியம் என வலியுறுத்தினார்.

அதன் பின்னர் பேசிய வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங்பேடி,

விவசாய பயிர் குறைதீர்க்கும் பொருட்டு மாவட்ட அளவிலான வேளாண் வழிகாட்டி மையங்களை நிறுவ வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வேளாண் விளைநிலங்களில் வேளாண் பதன்செய் குறு ஆலைகள் நிறுவுவதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் அடையலாம் என்றும் தெரிவித்தார்.

இவ்விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து வேளாண்மை, தோட்டக்கலை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க