• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் குறித்து தமிழக அரசின் பதிலுக்கு சித்தார்த் வருத்தம்

April 29, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதையடுத்து, தமிழக விவசாயிகளின் தற்கொலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு, “விவசாயிகளின் தற்கொலைக்கு வறட்சி காரணம் இல்லை, தனிப்பட்ட காரணங்களால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” என்று பதில் அளித்தது.

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம்
தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறுகையில் “விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்யவில்லை, சொந்தக் காரணங்களுக்காகவே தற்கொலை செய்து கொண்டனர் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.பூனைக்கு மணி கட்டப்போவது யார்? நமது விவசாயிகளுக்கு துணை நிற்போம்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க