July 7, 2018
தண்டோரா குழு
8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளை போராட தூண்டியதாக சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி அரூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் – சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு சேலம்,கிருஷ்ணகிரி,தருமபுரி, திருவண்ணாமலை,காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கு அந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் உள்ள காளிப்பேட்டையில் நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் விவசாயிகளை இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.இதனையடுத்து,8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை போராட தூண்டியதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.