• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – அய்யாக்கண்ணு

April 28, 2017 தண்டோரா குழு

தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் தென்னக நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. விவசாய கடனை தள்ளுபடி செய்தால் மட்டுமே தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியும்.

வங்கியில் விவசாயி வாங்கிய கடனுக்காக வங்கி அதிகாரிகள் கடன் பெற்ற விவசாயிகளின் மனைவி, மக்களை தரக்குறைவாக பேசுவது மற்றும் வீடு, நிலங்களை விற்று கடனை அடைக்குமாறு கூறுவதாலேயே விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

வங்கி அதிகாரிகள் விவசாயிகளை மிரட்டுவதை அரசு கண்டிக்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த கருத்துக்கும் கடும் கண்டனம்.”

இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.

மேலும் படிக்க